புதுச்சேரியிலும் +2 பொதுத்தேர்வு ரத்து : முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு...

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரியிலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியிலும் +2 பொதுத்தேர்வு ரத்து : முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு...

கொரோனா 2வது அலையின் கோரத்தாண்டவம் காரணமாக சிபிஎஸ்இ மாணவர்களுக்கான +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைதொடர்ந்து ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்திலும் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில்   12 ஆயிரத்து 353 மாணவர்கள், காரைக்கால் மாவட்டத்தில் 2ஆயிரத்து 321 மாணவர்கள் என +2 பயின்று வந்த மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடும் முறைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.