நாகர்கோவிலில்   கரும்பூஞ்சை அறிகுறியுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  கரும்பூஞ்சை நோய் அறிகுறியுடன்  இன்று 4 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நாகர்கோவிலில்   கரும்பூஞ்சை அறிகுறியுடன் 4 பேர் மருத்துவமனையில்  அனுமதி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு சமீப காலமாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கரும்பூஞ்சை நோய் அறிகுறியுடன்  இன்று 4 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  

நாகர்கோவிலில் ஏற்கனவே ஒருவர் கரும்பூஞ்சை நோய்க்கு  உயிரிழந்த நிலையில் தற்போது 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 12 பேர் கன்னியகுமாரி மாவட்டத்தில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.