அடேங்கப்பா! சுமார் 15 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் நடத்திய சோதனையில்  14 ஆயிரத்து 232 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அடேங்கப்பா! சுமார் 15 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் நடத்திய சோதனையில்  14 ஆயிரத்து 232 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கானது அமலில் இருந்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனை சாதமாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கும் சில விஷமிகள் கள்ளத்தனமாக  மதுபானங்கள்,கள்ளச்சாராயம்,சுண்டக்கஞ்சி ஆகியவற்றை கூடுதல் விலைக்கு மது பிரியர்களுக்கு விற்று வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்துவதற்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார்  தமிழகம் முழுவதும் உள்ள மலை பகுதிகளில் தீவிர சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். அதில் கடந்த 15 நாட்களாக மேற்கொண்ட சோதனையில் தமிழகம் முழுவதும் தடைச்செய்யப்பட்ட கள்ளச்சாராயம்,மதுபானம்,சாராய ஊறல்கள் விற்றதாக 232 வழக்குகள் பதிவு செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.