அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் தடை...2 மணி நேரம் அவதிகுள்ளான நோயாளிகள்!

அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் தடை...2 மணி நேரம் அவதிகுள்ளான நோயாளிகள்!

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மின் விநியோகம் பாதிப்பால் சுமார் 2 மணி நேரம் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் என நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிக்க : திரைத்துறையில் யுவனின் 26 வருடம்... இணையத்தில் வைரலாகும் ஹேஸ்டேக்...!

இந்நிலையில் மருத்துவமனை அருகே மின்கம்பம் மாற்றும் பணி நடைபெற்று வருவதால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அத்துடன், ஜெனரேட்டர் பழுது காரணமாக மின் விநியோகம் இல்லாமல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.