தடுப்பூசியை இலவசமாக வழங்க வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...!!

கொரோனா நெருக்கடியை சமாளிக்க தடுப்பூசிகளை குறித்த நேரத்தில் இலவசமாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தடுப்பூசியை இலவசமாக வழங்க வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...!!

கொரோனா நெருக்கடியை சமாளிக்க தடுப்பூசிகளை குறித்த நேரத்தில் இலவசமாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளுக்கு மாறுபட்ட விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது மற்றும் மாநிலங்களே தடுப்பூசிகளை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்ள அனுமதி போன்ற மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைகளை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

மேலும் மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவை விரட்டியடிக்கவும், பரவலை கட்டுக்குள் கொண்டு வரவும் தடுப்பூசியை குறித்த நேரத்தில் இலவசமாக வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.