பன்னீரை புறக்கணித்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம்.! ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.!

பன்னீரை புறக்கணித்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம்.! ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.!

ஓ பன்னீர் செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் முடிவு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப் போனோம்  இனிமேலும்  தொடர்ந்தால்  அதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் என நெல்லையில் தலைமைக்கு எதிராக அதிமுக தொண்டர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட வண்ணார்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதியில் அதிமுக தலைமைக்கு எதிராக மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களில் அதிமுக கட்சி செயல்பாடுகளில் மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ அவ்வாறு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப் போனோம்.

இனிமேலும் தொடர்ந்தால் தலைமை கழகத்தை  முற்றுகையிடுவோம். மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் திருநெல்வேலி மாவட்டம் என்று போடப்பட்டிருந்தன. தற்போது தேர்தல் நேரத்தில் முதன்முதலாக சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.