இன்னும் ஒரு வாரம் தான்,.அப்புறம் பாருங்கள் கொரோனாவே இருக்காது,.! - தமிழக அமைச்சர் அதிரடி.!  

இன்னும் ஒரு வாரம் தான்,.அப்புறம் பாருங்கள் கொரோனாவே இருக்காது,.! - தமிழக அமைச்சர் அதிரடி.!  

இன்னும் ஒரு வார காலகட்டத்திற்குள் மதுரை மாவட்டம் வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

கொரோனாவின் இரண்டாம் அலையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வந்தநிலையில் மதுரையிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்தது. அரசின் சிறப்பான முயற்சியால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 


இந்நிலையில் மதுரை அருகே பூதக்குடி கிராமத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "மதுரை மாவட்டத்தில் அரசு அதிகாரிகளின் சீறிய முயற்சியால் தொற்று குறைந்துள்ளது. அடுத்த வாரம் மதுரை கொரோனோ தொற்று இல்லாத மாவட்டமாக மாறும்" எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் "கட்டுமான பொருட்களின் விலை உயர்வு கொரோனோ பொதுமுடக்க தளர்வுக்கு பின்னர் கட்டுக்குள் வரும். முழு ஊரடங்கு காரணமாக கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.மருந்தகங்களில் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிகவிலைக்கு விற்பனை செய்தால் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்"  எனவும் தெரிவித்தார்.