ஓபிஎஸ்சின் எதிர்காலம் இனி...தொடர்ந்து கலாய்த்து பேசும் ஜெயக்குமார்...!

ஓபிஎஸ்சின் எதிர்காலம் இனி...தொடர்ந்து கலாய்த்து பேசும் ஜெயக்குமார்...!

ஈபிஎஸ் மேல்முறையீடு:

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தனிநீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஈபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இருநீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு:

இந்த மேல்முறையீடு வழக்கில் இரு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோரின் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனிநீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பானது ரத்து செய்யப்படுவதாகவும், கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் மூலம், ஈபிஎஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, கட்சியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்கியதும் செல்லும் என்று உறுதியாகியுள்ளது.

குஷியில் எடப்பாடி தரப்பினர்:

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பையடுத்து, எடப்பாடி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

செய்தியாளர்களை சந்தித்து வரும் ஜெயக்குமார்:

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பைத் தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பானது, அதிமுக தொண்டர்கள் கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று கூறினார். இந்த தீர்ப்பை அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருவதாகவும் கூறினார்.

இதையும் படிக்க: அவர் உலக கோடீஸ்வரர் பட்டியலில் இருக்கார்.. "வசூல் ராஜா ஓபிஎஸ்"..! போட்டுடைத்த டி.ஜெ!

ஓபிஎஸ்சை கலாய்த்த ஜெயக்குமார்:

தொடர்ந்து பேசிய அவர், இனி ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் பூஜ்ஜியம் என்று  ஓபிஎஸ்சை கலாய்த்து பேசியுள்ளார். இந்த ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்தே, ஓபிஎஸ்சை ஏதாவது ஒரு வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நக்கலுடன் பேசிவருகிறார். அந்த வகையில், உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பது போல ஓ.பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார் என்றும், வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் போல வசூல்ராஜா ஓபிஎஸ் என்றும், அதேபோல், அரசியல் எதிர்காலத்தில் இனி ஓபிஎஸ்க்கு பூஜ்ஜியம் தான் என்றும் தொடர்ந்து நக்கலுடன் பேசி வருகிறார்.