திருமணமான பெண்களை குறிவைத்த ரங்கசாமி... உல்லாசத்தில் ஈடுபட்டு பணம் பறித்த அவலம்!!

திருமணமான பெண்களை குறித்து பணம் பறித்து ஏமாற்றி வந்த ஆந்திராவை சேர்ந்த ரங்கசாமி என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருமணமான பெண்களை குறிவைத்த ரங்கசாமி... உல்லாசத்தில் ஈடுபட்டு பணம் பறித்த அவலம்!!

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கசாமி என்பவர் வேலை நிமித்தமாக தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள லாலகுடாவிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு வேலை கிடைக்காததால் அங்கும் இங்குமாக வேலை தேடி அலைந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு இளம்பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்ட ரங்கசாமி அப்பெண்ணிடம் அடிக்கடி அன்பாகவும், ஆதரவாகவும் பேசி காதல் வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துள்ளார். அவ்வப்போது ஏதாவது ஒரு காரணத்தை கூறி பணம் பறித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பெண் ரங்கசாமியை ரகசியமாக கண்காணித்தபோது,  திருமணமான பல பெண்களை ரங்கசாமி  ஏமாற்றியது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், லாலகுடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரை அடுத்து ரங்கசாமியை போலீசார் தேடியபோது, அவர்  ஐதராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் கோவா சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது, ரங்கசாமிக்கு சரியான வேலை கிடைக்காததால் பெண்களை ஏமாற்றி அவர்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதில் சிலர் தனது கணவரை விவாகரத்தும் செய்துள்ளனர்.  பாலியல் ரீதியாக ஆசை தீர்ந்த பிறகு, பணத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டு வேறு பெண்ணிற்கு வலை வீசுவதையே தனது பொழுது போக்காக வைத்துள்ளார். தொடர்ந்து  போட்டோ மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ரங்கசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.