கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்... நேரில் பார்த்த மகளையும் விட்டுவைக்காத எஸ்.ஐ! பணத்துக்காக அக்கா தங்கையின் கேவலமான புத்தி!!

சென்னையில் 15 வயது சிறுமிக்கு துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவல் உதவி ஆய்வாளர், உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா என மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்... நேரில் பார்த்த மகளையும் விட்டுவைக்காத எஸ்.ஐ! பணத்துக்காக அக்கா தங்கையின் கேவலமான புத்தி!!

சென்னையில் 15 வயது சிறுமிக்கு துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவல் உதவி ஆய்வாளர், உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா என மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.

சென்னை மாதாவரம் பால்பண்ணை பகுதிக்கு கொரோனா பாதுகாப்புப் பணிக்காக சென்ற எஸ்.ஐ. சதீஷ்குமாருக்கும், அதே பகுதியில் உள்ள அருள் நகர் நியாயவிலைக்கடையில் பணிபுரிந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் திருமணமான நிலையில்,  காலப்போக்கில் அது கள்ள காதலாக மாறி, இருவரும் ஒருவருட காலமாக   தனிமையில் உல்லசமாக இருந்துவந்துள்ளனர்.

ஒரு நாள் வழக்கம்போல மணலி பகுதியில் அந்த பெண்ணின்  வீட்டில் இருவரும் தனிமையில் இருந்ததை, பள்ளிக்குச் சென்றுவந்த அந்த பெண்ணின் 15 மகள் பார்த்துள்ளார். பின்னர் இதை அப்பாவிடம்  சொல்லிவிட போவதாக கூறியுள்ளார். இதனால் பயந்து போன எஸ்.ஐ. சதீஷ் குமார் இதைப் பற்றி உன் அப்பாவிடம் நீ சொன்னால், உன் அப்பாவும் உன் தம்பியும் உயிரோடு இருக்க மாட்டாங்க , துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுவேன் என துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

15 வயது மகள்  பயத்தில் எதையுமே தன் அப்பாவிடம் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இதிலிருந்து வழக்கம்போல வீட்டிற்கு வருவதும் போவதுமாய்  சதீஷ் இருந்துள்ளார். அதுவரையிலும் தாய் மீது மட்டுமே இருந்து பார்வை, திடீரென 15வயது மகளின் பக்கம் திசை திரும்பி, சிறுமியின் தாயிடம் உனக்கு தற்போது இருக்கும் வசதியைவிட இன்னும் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று கேட்டுவிட்டு, உன் மகளை எனக்குப் பிடித்துள்ளது. அவளுடைய அனைத்து தேவைகளையும்  நான் பார்த்துக்கொள்கிறேன். நீ சரி என்று சொன்னால் மட்டும் போதும் என்றதும், சிறுமியின் தாயும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சதீஷ் தன் ஆட்டத்தை ஆரம்பித்து,  சிறுமியின் பிறந்தநாள் அன்று இரவு 12 மணிக்கு கேக் வாங்கிவந்து கேக் வெட்டச் சொல்லியுள்ளார். அப்போது சிறுமியின் தந்தை இதுபோன்று தேவையில்லாத வேலையெல்லாம் செய்ய வேண்டாம்.  பெண் பிள்ளை இருக்கும் இடத்தில் இதுபோன்று இரவு நேரத்தில் வர கூடாது என சண்டை போட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து அடுத்த மாதமே அந்தக் குழந்தைக்கு ஒரு கிஃப்ட் கொடுப்பதாகக் கூறி ‘ஐ போன்’ வாங்கி கொடுத்துள்ளார். அதை அந்தக் குழந்தை வாங்க மறுத்துள்ளது. அதையும் சிறுமின் தாய் வாங்கிவைத்துக்கொண்டு நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க போங்க என்று சொல்லவே சதீஷூம் சென்றுள்ளார். அதன் பிறகு, நான் உன் மகளுடன் தனியாகச் செல்ல வேண்டும் என்று உதவி ஆய்வாளர் சதீஷ்  கேட்டுள்ளார். அதற்காக சிறுமியின் தாயிடம் ரூ. 1 லட்சம் பணத்தைச் செலவிற்கு வைத்துக்கொள் என்று எஸ் .ஐ சதீஷ் கொடுத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து அந்தப் பணத்தை சிறுமியின் தாயும், சிறுமியின்  பெரியம்மாவும் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொண்டு, சதீஷுடன் செல்ல  மகளை வற்புறுத்தியுள்ளனர். மறுநாள் சதீஷ் வீட்டிற்கு வந்துள்ளார். சதீஷிடம் கூட செல்ல  பெரியம்மாவும், சிறுமியின் தாயும் வற்புறுத்தி உள்ளனர். இதில் கடுமையாக பயந்து போய் தன்னுடைய அப்பாவிடம் நடந்ததை சொல்லியுள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தைக்கும், தாயுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிறுமியின் தாயை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாகச் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால்  நீயும், உன் மகளும், மகனும் உயிரோடு இருக்கமாட்டீர்கள் என துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். என்று சதீஷ்குமார் மிரட்டியுள்ளான். இதனால் குழந்தையையும், தன்னையும் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கமால் இருந்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து உதவி ஆய்வாளர் சதீஷ் ,சிறுமியின் தாயின் உதவியுடன் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி மீண்டும் இணங்க மறுத்த உடன் ஆத்திரத்தில் உன்னை கொலை செய்து விடுவேன் என துப்பாக்கியை சிறுமியின் நெற்றியில் வைத்து மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து இது போன்ற தொல்லையால் , சிறுமியின் தந்தை மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய மாதவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் உதவி ஆய்வாளர் சதீஷை கைது செய்தனர். சதீஷ் தற்போது காசிமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாதவரம் துணை ஆணையர் தனிப்படை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.  தனிப்படையில் இருந்த போது குற்றாவளிகளிடம் எப்போதும் துப்பாக்கியை காட்டி மிரட்டும் சதீஷ் ,  தன்னுடைய இச்சைக்கு பயன்படுத்த சிறுமியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு உடைந்தாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மாதவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.