அமைச்சருடன் உடலுறவு வைத்துக் கொண்டதுதான் நான் செய்த முட்டாள்தனம்... டாக்டரிடம் கதறிய சாந்தினி!! 

அமைச்சருடன் உடலுறவு வைத்துக் கொண்டதுதான் நான் செய்த முட்டாள்தனம்... டாக்டரிடம் கதறிய சாந்தினி!! 

தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு தன்னை ஏமாற்றியதாகவும், தன்னை 3 முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த புகார் விவகாரத்தில் காவல் துறையினர் முன்னாள் அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

அந்த விசாரணையில்  நடிகை சாந்தினியும் கோபாலபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவரும் கருக்கலைப்பு தொடர்பாக உடையாடும் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சாந்தினி- மருத்துவர் அருண் இடையேயான உரையாடலின் முழு விபரம் :

சாந்தினி ; மலேசியாவிலிருந்து இருந்து பேசுகிறேன். 

மருத்துவர் அருண்; நலமாக இருக்கிறார்களா? 

சாந்தினி ; நலமாக இருக்கிறேன், அமைச்சர் மணிகண்டன் செய்த விவகாரத்தால் தனது வயிற்றுப் பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு கருப்பு அடையாளம் உள்ளது. இந்த கருப்பு  அடையாளத்தால், எனது தாயார் பல்வேறு கேள்விகளை கேட்கிறார்? இதற்கு என்ன பதில் அளிப்பது. அமைச்சர் மணிகண்டன் தனக்கு செய்த விவகாரத்தில் கர்மவினை தான் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது, அமைச்சர் தனக்கு செய்த அனைத்தும் அவர் பொறுப்பேற்க வேண்டும் பதிலளிக்க வேண்டும், 

மருத்துவர் அருண்; ஆமாம் உண்மைதான்  


சாந்தினி ;அமைச்சர் மணிகண்டன் உங்கள் நண்பர் தானே அவருக்குப் பதவி போனது ஏன் என உங்களுக்கு தெரியாதா அவரது பேச்சினால்தான் பதவி போனது .அரசுக்கு துரோகம் செய்துவிட்டார். 

மருத்துவர் அருண்;  ஆமாம் 

சாந்தினி ; உடல் முழுவதும் காயங்கள் அதுவும் கருப்பு அடையாளங்களும் உள்ளது. பெற்றோர்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. இது தொடர்பாக அமைச்சர் மணிகண்டன் தொடர்பு கொண்டால் பேச மறுக்கிறார். நான் எத்தனை முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும் நீங்கள் தான் எனக்கு கருக்கலைப்பு செய்தீர்கள்.

மருத்துவர் அருண்; நீங்கள் கூறியதற்கு தற்போது அமைச்சர் என்ன சொல்கிறார்? 

சாந்தினி; தான் தொடர்பு கொண்டாலும் போன் அழைப்பை எடுப்பதில்லை. முற்றிலுமாக தவிர்க்கிறார். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து முதல்வரிடம் நேரடியாக புகார் அளித்தால் அமைச்சர் மணிகண்டனின் நிலை என்ன ஆகும் என தெரியுமா? ஏற்கனவே அமைச்சர் மணிகண்டனுக்கு அதிக பிரச்சனை உள்ளது இது போன்று நான் எங்கேயாவது புகார் அளித்து இருக்கிறேனா?

சாந்தினி; அமைச்சர் மணிகண்டன் எனக்கு பல முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்த போதும் பல பிரச்சினைகள் ஏற்பட்ட போதும் அதை பயன்படுத்தி நான் அதை வைத்து எதையும் எதிர்பார்க்கவில்லை. அது உங்களுக்கும் தெரியும்.என்னை பயன்படுத்திக் கொண்டு துரத்தி விடுமாறும் நீங்கள் சொன்னதாக அமைச்சர் தெரிவித்தார். மலேசியாவில் ஒரு முக்கிய புள்ளியாகக் இருப்பவள் நான் தெரியுமா? 

மருத்துவர் அருண்;  நான் அது போன்று தெரிவிக்க வில்லை 

சாந்தினி; நான் ஒரு முக்கிய புள்ளி, எனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து நான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் நான் எதையும் மணிகண்டனுக்கு செய்யவில்லை. நான் இந்தப் பிரச்சினையை முதல்வர் பழனிச்சாமியிடம் எடுத்துச் செல்வேன். ஏனென்றால் முதல்வர். கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். நானும் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், நானும் முதல்வரும் சேலத்தை சேர்ந்தவர்.என்னால் முதல்வர் உட்பட எந்த அமைச்சரையும் நேரடியாக சந்திக்க முடியும். இறுதியாக முதல்வரிடம்  செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை 

சாந்தினி; அமைச்சருக்கு பதவி போனது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா 

மருத்துவர் அருண்; அவரது பேச்சினால்தான் பதவி போனது 

சாந்தினி; பழகிய எனக்கும் எதும் செய்யவில்லை என்றாலும் அவரது தொகுதி மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. மலேசியாவில் உள்ள ராமநாதபுரம் மக்களும் அமைச்சர் மணிகண்டன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்

மருத்துவர் அருண்; எனக்கு தெரியும் 

சாந்தினி; ஒரு நண்பராக மணிகண்டனுக்கு நீங்கள் அறிவுரை வழங்கி இருக்க வேண்டும் அதை ஏன் செய்யவில்லை?

மருத்துவர் அருண்; நாங்கள் பல அறிவுரை வழங்கியும் அமைச்சர் கேட்கவில்லை

சாந்தினி; மணிகண்டனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது மலேசியாவில் வெடி வெடித்துக் கொண்டாட்டம் நடந்தது. நான் அரசிடம் நேரடி தொடர்பில் இருந்தேன்.அவருக்கு பதவி போக போகிறது என்பதை ஒன்றரை மாதத்திற்கு முன்பாகவே அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதை  நம்பவில்லை. தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்ற மமதையில் அவர் இருந்தார் .

சாந்தினி; நான் சாலையோரமாக நிற்கும் பெண்ணல்ல, தூதரக தொடர்புடன், அரசு பதவியில் இருப்பவர். நான் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.மலேசிய தூதரகத்தில் பொறுப்பில் இருக்கும் நான் அவருக்கு எதிராக கடிதம் எழுதினால் அமைச்சர் மணிகண்டன் நிலை என்ன ஆகும்?

சாந்தினி; எனக்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை எனில் சென்னைக்கு வந்து அனைத்து ஆதாரங்களையும் வைத்து முதல்வரிடம் புகார் அளிப்பேன். கருக்கலைப்பு செய்த காரணத்தினால் உங்களுடைய பெயரை இழுக்க மாட்டேன். இருந்தாலும் நண்பர் என்ற அடிப்படையில் உங்களை எச்சரிக்கிறேன்.

சாந்தினி; அமைச்சர் மணிகண்டனுக்காக மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் சிறப்பு பூஜை, வேண்டுதல் ஆகியவற்றை செய்தேன். இதனால் எனது எடை குறைந்தது. ஆனால் இதைத் தவறாக குற்றம்சாட்டி, நான் பலருடன் தொடர்பு இருப்பதால் தான் எடை குறைந்துள்ளதாக அவதூறு செய்தார் மணிகண்டன்.இதுபோன்ற அவதூறாக பேசியதால் தான் மணிகண்டன் பதவி பறிபோனது.தவறுகளை சுட்டிக்காட்டும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ளாததுதான் அவர் தற்போது தனித்து விடப்பட காரணம். 


சாந்தினி; அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட உள்ளார் என முதல்வர் அலுவலகத்திலிருந்து எனக்கு நேரடியாக முன்கூட்டியே தகவல் தெரிந்தது. அவர் நம்பவில்லை, தற்போது அது நடந்து விட்டது. நான் மணிகண்டன் குறித்து முதல்வரிடம் சொன்னால் என்னவாகும்?

மருத்துவர் அருண்; அவ்வாறு நீங்கள் புகார் அளித்தால் மணிகண்டன் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பில்லை 


சாந்தினி; தற்போது பதவி போன அமைச்சர் மணிகண்டன் எனக்கு ஒரு பெரிய விஷயம் எனக்கு இல்லை.அமைச்சர் மணிகண்டன் உடன் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட தராத அளவு மோசமானவர் அமைச்சர் மணிகண்டன் என குற்றம்சாட்டியுள்ளார். அவருடன் பணிபுரியும் அனைவரும் அமைச்சர் மணிகண்டன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் இது தொடர்பான அறிக்கை தொடர்ந்து முதல்வருக்கு சென்று கொண்டுள்ளது.

மருத்துவர் அருண்; அமைச்சர் பதவி மணிகண்டனிடம் பறிக்கப்பட்டுள்ளது. தற்போது மணிகண்டனிடம் இருந்து உங்களுக்கு என்ன வேண்டும் 

சாந்தினி; எனக்கு எதுவும் வேண்டாம். அவருடைய இந்த நிலைமைக்கு காரணம் அவர்தான். அந்த விஷயத்தை மட்டும் மணிகண்டனிடம் புரிய வையுங்கள்.மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை மணிகண்டன் குறித்து விசாரணை செய்த போது யாரும் நல்ல விதமாக தெரிவிக்கவில்லை. முதல்வரும் மிகவும் அதிருப்தியில் உள்ளார்.மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்தாலும் சாதாரண அமைச்சர் பதவியை கொடுப்பார் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது.

மருத்துவர் அருண்; முதல்வர் ஏன் அதிருப்தியில் இருக்கிறார் 

சாந்தினி; அவரது சொந்த தொகுதிக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்பதால்தான் முதல்வர் அதிர்ச்சியில் இருக்கிறார். அனைவரையும் ஜாதி ரீதியாக பார்க்கிறார், நயினார் நாகேந்திரன் கட்சி விட்டு விலகுவதற்கு முக்கிய காரணம் இவர் தான்.

சாந்தினி; கல்லூரிக் காலத்தில் நான் பெரிய ரவுடி. நான் மலேசிய தூதுவராக மாறிய பிறகு தான் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை, அமைதியாக இருக்கிறேன் 

சாந்தினி; நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம் அமைச்சர் மணிகண்டனுடன் உடலுறவு வைத்துக் கொண்டதுதான்.மணிகண்டனை தவிர்த்து நான் யாரிடமும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை ஆனால் தான் பல அமைச்சர்கள்  உடன் செல்வதாக தொடர்ந்து சந்தேகப்பட்டு குற்றம்சாட்டுகிறார்.அமைச்சர் மணிகண்டன் மட்டுமே என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டவர். அது அவருக்கு தெரிந்த நண்பர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். அமைச்சர் பதவி பதவி போன பிறகு பூஜைகளும் யாகங்களும் நடத்தி வருகிறார் மணிகண்டன்.


மருத்துவர் அருண் ; அமைச்சர் எங்கு இருக்கிறார்? அமைச்சரின் அரசு இல்லத்தில்தான் மணிகண்டன் இருக்கிறாரா ?

சாந்தினி ; பதவி பறிக்கப்பட்டும் 3 மாத கால அவகாசம் கொடுக்கப் பட்டதால் அங்கு தான் வசிக்கிறார். அமைச்சர் மணிகண்டன் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்றால் பரவாயில்லை என்னை பல அமைச்சர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.ஏன் மலேசிய ராஜாவே என்னை பின் தொடர்கிறார்!