ட்ரயல் பார்த்த சசிகலா,..அதிர்ந்து போன எடப்பாடியார்,..ஆடியோ மேட்டரால் குழம்பிப்போன தொண்டர்கள்.!  

ட்ரயல் பார்த்த சசிகலா,..அதிர்ந்து போன எடப்பாடியார்,..ஆடியோ மேட்டரால் குழம்பிப்போன தொண்டர்கள்.!  

என்ன தான் எடப்பாடி பழனிசாமி பன்னீர் செல்வத்தையும், சசிகலாவையும் ஓரம் கட்டி கட்சியின் முக்கிய சக்தியாக வளர்ந்திருந்தாலும் இப்போதும் சசிகலா எப்போது என்ன செய்வார் என்று பீதியில் தான் இருக்கிறார். இதற்கு காரணம் அவர் உற்பட பதிவியிலிருக்கும் பலர் சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான். அதனால் எப்போது யார் சசிகலா பக்கம் போவார்கள் என்ற அச்சவுணர்விலே எடப்பாடி இருக்கிறார்.

அதே போல இனி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என சசிகலா கூறினாலும், அது உண்மை அல்ல என்பது சசிகலா பேசியதாக வெளிவந்த ஆடியோவில் இருந்தே தெரிந்தது. இந்த ஆடியோ வெளியானத்திலிருந்தே எடப்பாடி பழனிசாமி பதட்டத்தில் தான் இருக்கிறார். இதற்கு காரணம் இந்த ஆடியோ அதிமுகவில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தான். 


என்ன தான் கே. பி. முனுசாமியை வைத்து இந்த ஆடியோவை அதிமுகவில் யாரும் பொருட்படுத்தவில்லை என்று கூறினாலும், இதை சொன்னதே அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் தான் என்பதில் இருந்தே இந்த ஆடியோ அதிமுகவில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம். 


இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் கேட்கும் போது அந்த ஆடியோவில் " சீக்கிரம் கட்சியை நான் சரிபண்ணிடறேன் கவலைப் படாதீங்க" என்று சசிகலா சொன்னது அதிமுக அடிமட்ட தொண்டர்களிடையே ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் "ரெண்டு பேரும் அடிச்சுக்கறதை பாத்தா கவலையா இருக்கு" என்ற தொண்டர்களின் உணர்வை தான் சசிகலாவும் பிரதிபலித்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இதை வைத்துப் பார்த்தால் ஒருவேளை சசிகலா நேரடியாக அரசியலில் இறங்கினால் நிச்சயம் அது அதிமுகவை அசைத்து பார்க்கும் என்றே தெரிகிறது.