அவரு சரியா சாப்பிடறதில்ல.. தூங்கறதும் இல்ல!! அதான் நானும் கூடவே வந்துருக்கேன்!!  டெல்லி சென்ற துர்கா.! 

அவரு சரியா சாப்பிடறதில்ல.. தூங்கறதும் இல்ல!! அதான் நானும் கூடவே வந்துருக்கேன்!!  டெல்லி சென்ற துர்கா.! 

திருமணம் முடிந்து 45 வருடங்களாக ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் உடனிருப்பவர் அவரது மனைவி துர்கா ஸ்டாலின். கடவுள் மறுப்பு கொள்கையில் நம்பிக்கை கொண்ட குடும்பத்திற்கு மருமகளாக சென்றாலும், அங்கும் தனது கடவுள் நம்பிக்கையை தொடர்ந்து வெளிக்காட்டி வருபவர். இது பற்றிய விமர்சனங்கள் பெரிய அளவில் வெளியே வந்தாலும் துர்காவின் கடவுள் நம்பிக்கையில் கருணாநிதியோ, ஸ்டாலினோ குறுக்கே வந்ததில்லை. 

கடவுள் நம்பிக்கை தனிப்பட்ட நபரின் விருப்பம், அது மனைவியாகவே இருந்தாலும் அதில் தலையிடக்கூடாது என்றே இதை பார்க்கவேண்டியுள்ளது. மேலும் ஸ்டாலின் முதல்வராக பல கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வருபவர் துர்கா ஸ்டாலின். அவர் முதல்வராக பொறுப்பேற்றதும் துர்கா ஸ்டாலின் கண்களில் வந்த ஆனந்த கண்ணீர் தமிழகம் முழுக்க வைரல் ஆனது. 

பாஜக போன்ற வலதுசாரி கட்சிகளின் ஆதரவாளர்கள் கூட ஸ்டாலின் முதல்வரானதற்கு அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் கடவுள் நம்பிக்கை தான் காரணம் என்று கூறிவந்தனர். இந்நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின்னர் முதன் முறையாக டெல்லி சென்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த பயணத்தின் போது ஸ்டாலினோடு அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றார். இந்நிலையில் அவர் ஸ்டாலினோடு டெல்லி பயணித்த காரணம் தற்போது வெளிவந்துள்ளது. 

அதாவது மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல், கொரோனா பணி காரணமாக ஓய்வு கூட இல்லாமல் கடுமையாக உழைத்து வருகிறார். இதன் காரணமாக அவர் உடல்நிலை சரிவர கவனிக்காமல் உள்ளார். மேலும்  சரியான நேரத்திற்கு சாப்பிடுவதுமில்லை, தூங்குவதில்லை, வழக்கமாக எடுத்து கொள்ளும் மருந்துகளைகூட எடுத்து கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நேரத்தில் கூடவே இருந்து ஸ்டாலின் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டும் என்பதில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். சரியான நேரத்தில் சாப்பாடு மற்றும் மருந்து, மாத்திரைகளை ஸ்டாலின் எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்காவே அவருடன் துர்கா ஸ்டாலினும் டெல்லிக்கு பயணம் செய்துள்ளதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.