நித்யானந்தாவே வெளியில் இருக்கும்போது என்னை கைது செய்து விடுவார்களா ..? போலீசுக்கு சவால் விடும் மதன்

சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் பறித்த யூ-டியூபர் மதன் தலைமறைவாக இருந்து கொண்டு பெண் ரசிகையிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

நித்யானந்தாவே வெளியில் இருக்கும்போது என்னை கைது செய்து விடுவார்களா ..? போலீசுக்கு சவால் விடும் மதன்

தடை செய்யப்பட்ட விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி இணையத்தில் பதிவேற்றியதோடு பெண்கள், சிறுமிகளை ஆபாசமாக பேசியதாக சர்ச்சையான யூட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மதன் தலைமறைவாக இருந்து கொண்டு தனது ரசிகைகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மதன் பெண்களுடன் ஆபாசமாக பேசிய ஆடியோக்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போதைய ஆடியோவில் மதன் பேசும் தகவல்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் மதன் பெண் ரசிகைகளுடன் பேசும் பேச்சுக்கள் போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது.

உங்கள் போட்டோவை எல்லாம் வெளியிட்டுள்ளார்களே? பெண் ரசிகை கேள்வி

எனது போட்டோவை வெளியிட்டு ‘யூ டியூப்’ தொடர்பான செய்திகளை கூறிவருகிறார்கள். அதில் எனது அண்ணன் புகைப்படமும் உள்ளது. நான் புகைப்படம் எடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்தபோது நான் எடுத்த புகைப்படத்தை ஒரு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இது போன்ற வி‌ஷயங்களை ஜாலியாக, குஜாலாக எடுத்து கொள்ள வேண்டியது தான் என்று பேசியுள்ளார் மதன்.

நீங்கள் ஜெயிலுக்கு சென்று விடுவீர்களா? உங்கள் சேனலை முடக்கி விடுவார்களா? ரசிகை கேள்வி

அதற்கு வாய்ப்பே இல்லை...நம்பர் 1 லாயர்களை வைத்துள்ளேன். டெல்லியிலும் வக்கீல்கள் உள்ளனர். லட்சக்கணக்கில் இதற்காக செலவு செய்துள்ளேன். ஜெயிலுக்கு செல்ல வாய்ப்பு இல்லை. ஒருவேளை அப்படி நடந்தால் வெளியில் வந்து மீண்டும் ‘யூ டியூப்’ சேனலை தொடங்குவேன்...அதற்கு மதன் ‘யூ டியூப் சேனல் என்றே பெயர் வைப்பேன் என்று தில்லாக பதிலளித்துள்ளார்.

இதற்கெல்லாம் கைது செய்வார்களா? ரசிகை கேள்வி

நம் தலைவர் நித்யானந்தாவே வெளியில் இருக்கும்போது என்னை கைது செய்து விடுவார்களா என்ன? இதற்கெல்லாம் பயந்து நான் முடங்கமாட்டேன். நான் ஜாதி, மதம் எதுவும் பார்ப்பதில்லை. சாமி கும்பிடுவதும் இல்லை. எல்லோரும் எனக்கு பொதுவானவர்களே என்று போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த ஆடியோ உரையாடல்களை வைத்து மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஆய்வகங்கள் உள்ளன. அதனை வைத்து மதனை எப்படியும் கண்டுபிடித்துவிடுவோம் என்று தெரிவித்தனர்.

போலீசார் மதனை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் போலீசுக்கு சவால் விடும் வகையில் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.