சென்னையில் கடந்த 6 மாதங்களில் 173 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது...

சென்னையில் கடந்த 6 மாதங்களில் 173 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 6 மாதங்களில் 173 பேர்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது...

சென்னையில் கொலை வழக்கு, கொலை முயற்சி, திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்கள், போதை பொருட்கள் கடத்துதல்,நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ, பாலியல் குற்றங்கள், உயிர்காக்கும் மருந்துகளை கடத்துபவர்கள் உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோரை சென்னை காவல்துறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

 இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நேற்று வரை கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 115 குற்றவாளிகள், சங்கிலி, செல்போன் பறிப்பு, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 29 குற்றவாளிகள், சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 12 குற்றவாளிகளையும்

கஞ்சா போதை பொருட்கள் விற்ற 12 பேர் உணவு பொருள் கடத்தியதாக ஒருவரும், ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்ற 4 குற்றவாளிகள் என மொத்தம் 173 குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

 குறிப்பாக ஜூன் மாதத்தில் மட்டும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட 19 குற்றவாளிகள்,ரெம்டெசிவிர் விற்ற 2 குற்றவாளிகள்,சைபர் குற்றம் 2 வழக்குகள் என மொத்தம் 23 குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.