80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்கள்...

சேலத்தில் 80-வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்கள்...

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பெரியசோரகை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மகன் சீனிவாசன் (20). அதே பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் விக்னேஷ் (23). இருவரும் கூலி தொழிலாளர்கள்.

இந்த வாலிபர்கள் 2 பேரும் கடந்த 202ம் ஆண்டு அக்டோபர் 24ந் தேதி, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மூதாட்டி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தகவல் அறிந்த ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மூதாட்டியிடம் வாக்குமூலம் பெற்றனர்.

மேலும் படிக்க | தேவாலயத்திற்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை... கிறிஸ்துவ மதபோதகர் கைது!

பின்னர் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், விக்னேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்ததை அடுத்து மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சீனிவாசன், விக்னேஷ் ஆகிய 2 பேருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார்.

மேலும் 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ஆயுள் சிறை தண்டனை பெற்ற 2 பேரையும், போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | கிரிப்டோ கரன்சி வைத்து ஏமாற்றியவரை கடத்திய நபரால் பரபரப்பு...