தலைமைக்காவலர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை...

தலைமைக்காவலர் வீட்டில் 20 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்ப்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைக்காவலர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை...

தூத்துக்குடி பி அன்ட்டி காலனியை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (47). இவர் பேரூரணி காவலர் பயிற்சி மையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வேல்த்தாய் (37).

இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்டு நேற்று ஊர் திரும்பியுள்ளனர்.

மேலும் படிக்க | மார்க்கெட்டில் நடந்த கொலையின் எதிரொலி... கடையடைப்பில் ஈடுபட்ட வணிகர்கள்...

அப்போது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. இதன்மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார்?என அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஆட்டோவை மீட்க சென்றவர் குழந்தைகளை கடத்திய மர்ம கும்பல்...