கிணற்றில் குளித்ததை தட்டிக்கேட்டதால் 4 பேருக்கு கத்திக்குத்து…

ராசிபுரம் அருகே கிணற்றில் குளித்ததை தட்டிக்கேட்டதால் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் குளித்ததை தட்டிக்கேட்டதால் 4 பேருக்கு கத்திக்குத்து…

ராசிபுரம் அருகே கிணற்றில் குளித்ததை தட்டிக்கேட்டதால் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில், அப்பகுதியை சேர்ந்த  30-க்கு மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரே நேரத்தில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிலர், ஒரேநேரத்தில் அதிகபேர் குளித்தால் ஏதாவது விபரீதம் ஏற்படும் எனவும் உடனடியாக வெளியே செல்லுங்கள் எனகூறி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தாம் மறைத்து வைத்திருந்த கத்தியால் நான்கு பேரை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்