டிபன் பாக்ஸ் குண்டு வெடித்ததால் உயிரிழந்த 7 வயது சிறுவன்...

பீகாரில் டிபன் பாக்ஸ் குண்டு வெடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிபன் பாக்ஸ் குண்டு வெடித்ததால் உயிரிழந்த 7 வயது சிறுவன்...

பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் சம்பா நதிக்கரையில் உள்ள தர்கா காட்டில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த குப்பை தொட்டியில் இருந்த புதிய டிபன் பாக்ஸைப் பார்த்த ஏழு வயது சிறுவன் அதை எடுத்து பார்த்துள்ளான். அதை சிறுவன் திறந்த போது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.

இதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்து மேலும் 2 வெடிகுண்டுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த ஒரே வாரத்தில் நடத்த இரண்டாவது வெடிகுண்டு சம்பவம் இது என்பது குறிப்பிடதக்கது.