14 வயது சிறுவனுடன் கள்ளக்காதல்... 6 குழந்தைகளை தவிக்கவிட்டு ஓட்டம் பிடித்த 40 வயது பெண்...

6 குழந்தைகளுக்கு தாயான 40 வயது பெண் 14 வயது சிறுவனுடன் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

14 வயது சிறுவனுடன் கள்ளக்காதல்... 6 குழந்தைகளை தவிக்கவிட்டு ஓட்டம் பிடித்த 40 வயது பெண்...

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தின் பஃதேபுரா தாலுகாவின் சக்ரபதா எனும் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதாகும் பெண் ஒருவர் காந்தி நகரில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் காந்தி நகரில் தன்னுடன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த அம்லிகேதா கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனை திருமணமான அப்பெண் காதலித்து வந்துள்ளார். இருவரின் காதலும் வளர்ந்த நிலையில், சிறுவனுடனே சென்றுவிடுவது என தீர்மானித்த அப்பெண், தனது கணவர், 6 குழந்தைகளை நிர்கதியாக்கிவிட்டு சிறுவனுடன் சென்று தலைமறைவாகினார்.

இதனிடையே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் 14 வயதாகும் தன் மகனை அப்பெண் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார். தனது மகன் 2007-ல் பிறந்தான், அவனுக்கு 14 வயது தான் ஆகிறது என அவனின் தந்தை ஆதார் அட்டையை ஆதாரமாகக் காட்டி தெரிவித்திருக்கிறார்.

அதே நேரத்தில் போலீசாரின் விசாரணையின்படி தந்தைக்கும் மகனுக்குமான தொலைபேசி உரையாடலின்படி சிறுவன் தான் 1997-ல் பிறந்தவன், எனக்கு சட்டப்படியான வயது இருப்பதாக தெரிவித்திருக்கிறான். எனவே குழப்பமடைந்துள்ள போலீசார் தந்தையிடம் சிறுவனின் பிறப்பு சான்றிதழை கொண்டுவரும்படி தெரிவித்திருக்கின்றனர். சிறுவனுக்கு மைனர் வயது என்பது உறுதியானால் மட்டுமே போஸ்கோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.