என் கணவர் என கூறி மோசடி செய்த மர்மநபர்கள்..! நடவடிக்கை எடுக்கக்கோரி பிரிட்டனை சேர்ந்த பெண் புகார் !!

என் கணவர் என கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உதகை காவல் கண்காணிப்பாளரிடம் பிரிட்டனை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என் கணவர் என கூறி மோசடி செய்த மர்மநபர்கள்..! நடவடிக்கை எடுக்கக்கோரி  பிரிட்டனை சேர்ந்த பெண் புகார் !!

உதகை அருகே மாவனல்லாவில், பிரிட்டனை பூர்விகமாக கொண்ட பார்பரா எலிசபெத் வில்லிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட எஸ்பியிடம் அளித்த புகாரில், சென்னையை சேர்ந்த மார்க்கஸ் என்பவர் மூலம் அறிமுகமான டொனால்ட் அலென் பார்கலே என்பவர் தனது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டதாகவும், தனது கணவர் என கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதேபோல், மார்க்கஸ் பழங்குடியினருக்கு வீடு கட்டி தருவதாக கூறி தனது பெயர், கையெழுத்தை போலியாக பயன்படுத்தி பணம் மோசடி செய்துள்ளதாகவும், தற்போது தனது வீட்டை அபகரிக்க திட்டமிட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.