தூங்கிய காவலாளி மீது ஏறி கார்....!

தூங்கிய காவலாளி மீது ஏறி கார்....!

வணிக வளாகத்தில் படுத்து தூங்கி கொண்டு இருந்த காவலாளி மீது கார் ஏறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தேனாம்பேட்டை,  தாமஸ் சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 70 வயதானவர் வேணு.  இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  இவர்  தினமும் இரவு நேரத்தில்,   தியாகராய  சாலையில் உள்ள kasi Arcod வணிக வளாகாத்தில், இரவில் படுத்து தூங்குவதை  வழக்கமாகவும் கொண்டுள்ளார்.

இந்நிலையில் வேணு,  நேற்று இரவு 10  மணியளவில்,  காசி ஆர்காடு வணிக வளாக கார்பார்கிங் பகுதியில் படுத்திருந்த போது, அங்கிருந்து வெளியேறிய கார், வேணு மீது ஏறியதில், துடிதுடித்து போன வேணுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.  

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வேணு இறந்ததை உறுதி படுத்திய நிலையில், பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, வணிகவளாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து,  வெளியேறிய காரின் பதிவு  எண்ணை வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:  தேர்தலுக்காக வேலையை ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி... வெற்றியா?!!