பிறந்து மூன்று  மணி நேரமே ஆன குழந்தை... சாலையோரம் வீசப்பட்ட பரிதாபம்...

சிவகங்கை அருகே சாலையோரம் வீசி செல்லப்பட்ட பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்து மூன்று  மணி நேரமே ஆன குழந்தை... சாலையோரம் வீசப்பட்ட பரிதாபம்...

சிவகங்கை மாவட்டம் கல்லலை அடுத்துள்ள நாகவயல் முதல் கூத்தலூர் செல்லும் சாலையில் உள்ள சருக்கு பாலம் அருகே பிறந்து மூன்று மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சாலையோரம் கிடந்துள்ளது. அவ்வழியே சென்ற பாடத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்த திவ்யநாதன் என்பவர் குழந்தை சாலையோரம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அதனை மீட்டு எஸ்.ஆர் பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து கல்லல் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் குழந்தை சிறு காயங்களுடன் காணப்பட்டதால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குழந்தை தாய் சேய் சிகிச்சை பிரிவில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் இங்குபேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது மேலும் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி தாய் சேய் பிரிவிற்கு நேரடியாக வந்து குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் குழந்தையை யார் விட்டு சென்றது என கல்லல் காவல்துறையினர் விசாரனை மேற்கொன்டு வருகின்றனர்.