காதலித்து ஏமாற்றிய காவலருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்திய இளம்பெண்...!

காதலித்து ஏமாற்றிய காவலருடன்  தன்னை சேர்த்து வைக்கக்கோரி காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்திய இளம்பெண்...!

கர்நாடக மாநிலம் மைசூரில் காவலர் தன்னை காதலித்து ஏமாற்றியதாகக்கூறி பெண் ஒருவர் நரசிபுரா காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டம் நரசிபுரா காவல்நிலையத்தில் ரவி என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் 2018ல் பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறி கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

காவலர் ரவி இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதையடுத்து காவலர் ரவியிடம் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த ரவி அவரிடம் இருந்து விலகி கடந்த சில நாட்களாக தொடர்பு இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், நரசிபுரா காவல்நிலையம் முன்பு அமர்ந்து தனது காதலன் ரவியுடன் தன்னை சேர்த்து வைக்குமாறிக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.