திருமணமான 20 நாட்களில் வரதட்சணை கேட்டு விரட்டினார்... சுங்கத்துறை அதிகாரி மீது புகாரளித்த மனைவி...

ஈரோட்டில், திருமணமான 20. நாட்களில் வரதட்சணை கேட்டு அடித்து விரட்டியதாக மத்திய சுங்கத்துறையில் பணிபுரியும் கணவர் மீது இளம் பெண் ஒருவர்  மாவட்ட ஆட்சியரிடம்  புகார்.

திருமணமான 20 நாட்களில் வரதட்சணை கேட்டு விரட்டினார்... சுங்கத்துறை அதிகாரி மீது புகாரளித்த மனைவி...

ஈரோட்டில், திருமணமான 20. நாட்களில் வரதட்சணை கேட்டு அடித்து விரட்டியதாக மத்திய சுங்கத்துறையில் பணிபுரியும் கணவர் மீது இளம் பெண் ஒருவர்  மாவட்ட ஆட்சியரிடம்  புகார் அளித்துள்ளார்.

மும்பையில் மத்திய சுங்கத்துறையில் கெமிக்கல் அசிஸ்டெண்ட் அதிகாரியாக பணிபுரியும் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், பெருந்துறையை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி உமாமகேஷ்வரிக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த மே 28 ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு பின் கோபிசெட்டிபாளையம் கணவர் வீட்டிற்கு சென்ற உமா மகேஸ்வரியை, மணிகண்டனும் அவரது குடும்பத்தினரும் 20 நாட்களில் வரதட்சணை கேட்டு அடித்து விரட்டியதாக  உமாமகேஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மத்திய அரசு பணியில் இருப்பதால் அதற்கேற்ப 40 சவரன் தங்க நகையும், 2 லட்சம் ரூபாய் பணமும் வரதட்சனையாக பெற்றோரிடம் வாங்கி வருமாறு கூறி அடித்து, சித்ரவதை செய்ததாகவும் புகாரில் அவர் கூறி உள்ளார். 

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய அவர், கணவருடன் சேர்த்து வைக்குமாறும் இல்லையெனில், கணவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.