மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர்!

வேலூரில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர்!

வேலூரில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடியாத்தம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கௌதம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மகளை காதலிக்க கூறி வற்புறுத்துவதாகவும், மகளின் புகைப்படத்தை முகநூலில் தவறாக சித்தரித்து வெளியிடுவதோடு, காதலிக்க மறுத்தால் வாழ்க்கையை சீரழித்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரை அடுத்து கௌதமை கைது செய்த மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.