அதிமுக பிரமுகர் மகன் வெட்டிப் படுகொலை... பட்டபகலில் மர்ம நபர்கள் வெறிசெயல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகரின் மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பிரமுகர் மகன் வெட்டிப் படுகொலை... பட்டபகலில் மர்ம நபர்கள் வெறிசெயல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகரின் மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலாங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவர் அதிமுக எம்.ஜி. ஆர் மன்ற செயலாளர் இருந்து வந்துள்ளார். இவரது மகன் ஆட்டோ ஓட்டுனரான இளங்கோ பலபத்திராமபுரம் குளக்கரையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் தடவியல் மற்றும் மோப்பநாய் உதவியுடன் மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ஊத்துமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது