வளர்த்த நாயுடன் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு!!!

தனது மனைவி இறந்த துக்கத்தில், வளத்த நாயுடன் தூக்கில் தொங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வளர்த்த நாயுடன் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு!!!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்ன சாயகார தெருவில்  பட்டு சேலை வியாபாரம் செய்யும்  பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான வீட்டின் முதல் மாடியில் கடந்த இரண்டு வருங்களாக வாடகைக்கு குடியிருக்கும் ராஜ் (50) என்பவர்  துணி தைக்கும் டைய்லராக பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் துணி தைக்கும் டைய்லர் ராஜ் நான்கு நாட்களுக்கு முன்பாக தான் வசித்து வந்த அறையிலுள்ள சுவற்றில், ஆங்கிலத்தில், சென்னையிலுள்ள தன்னுடைய மனைவி இறந்து விட்டதாகவும், இனிமேல்  நான் வாழ்வதற்கு விருப்பம் இல்லை என எழுதி வைத்துவிட்டு, தான் ஆசையோடு வளர்த்து வந்த நாயுடன் சேர்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர்கள் தூக்கிட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகவே,  உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீச தொடங்கியது.

மேலும் படிக்க | மனிதம் இறந்து விட்டதா? சிசிடிவி வீடியோவால் கொந்தளித்த பொதுமக்கள்!!!

இதனை தொடர்ந்து இன்று வீட்டின் உரிமையாளர் பாஸ்கார்  என்பவர் வாடகை பணத்தை வாங்குவதற்காக தன்னுடைய  வீட்டிற்கு வந்த போது மேல் மாடியில்  குடியிருக்கும் ராஜ்  தங்கி இருந்த  அறையில் துர் நாற்றம் அதிகமாக வீசவே, சந்தேகமடைந்த  பாஸ்கார் போலிஸாருக்கு தகவலை தெரிவித்தார்.

தகவலறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று  மாடியிலுள்ள வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, அறையினுள்ளே ராஜீம், அவரது நாயும் தூக்கில் தொங்கிக் கொண்டு  அழுகிய நிலையில்,  தூர் நாற்றத்தோடு காணப்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலஸ் ஊழியர்களை  வரவழிக்கப்பட்டு அழுகிய ராஜ் மற்றும் நாய் உடலை அங்கிருந்து போலிஸார் அப்புறப்படுத்தி, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர்.

மனைவி இறந்த துக்கம் தாளாமல், தான் வளர்த்த நாய் உடன் தூக்கில் தொங்கி மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | நாய் குறுக்கே விழுந்ததால் விபத்து : கீழே விழுந்து உயிரிழந்த பஸ் டிரைவர் !!