சொகுசு காரில் வந்து ஆடுகள் திருட்டு... காரை விட்டுவிட்டு தப்பியோடிய திருடர்கள்...
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே சிகாரில் சொகுசு காரில் வந்து ஆடுகள் திருடி கொண்டு செல்லும் போது பொதுமக்கள் விரட்டியதால் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே சிகார் ஊராட்சி செட்டி தெருவை சேர்ந்தவர் தியாகராசன் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது தனது வீட்டு வாசலில் வளர்த்து வருகிற ஆடுகள் படுத்து இருந்தன. திடீரென ஆடுகள் சப்தம் போடுவதை கண்டு, வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது, ஒரு காரில் வந்த 3 நபர்கள், இரண்டு ஆடுகளை காரில் ஏற்றி செல்வதை பார்தது சப்தம் போட்டுள்ளார்.
சப்தம் கேட்டு தெருவில் உள்ளவர்கள், காரை விரட்டி கொண்டு சென்றனர். காக்கழனி- தேவூர் சாலையில் இரட்டை மதகடி பகுதியில் செல்லும் போது, காரில் வந்த நபர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
தகவலறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆடுகளை திருட பயன்படுத்திய காரை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் ஆடுகளை திருடி சென்ற 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.