கோழி சண்டையிட்டவர்களை தட்டிக் கேட்ட பெண் காவலர்கள் மீது தாக்குதல்....

கோழி சண்டையிட்டவர்களை தட்டிக் கேட்ட பெண் காவலர்கள் மீது தாக்குதல்....

சவ ஊர்வலத்தின் போது போக்குவரத்துக்கு இடையூறாக கோழி சண்டை விட்ட நபர்களை தட்டிக்கேட்க சென்ற பெண் உதவி ஆய்வாளர் உட்பட இரு காவல்துறையினர் மீது தாக்குதல். 

அயனாவரம் உதவி ஆய்வாளர் மீனா மற்றும் காவலர் திருநாவுக்கரசு மற்றும் காவலர் சூர்யா பிரகாஷ் ஆகியோர் இன்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.  அயனாவரம் வாட்டர் டேங்க் சாலை வழியாக வரும் போது, ரவி என்பவரின் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. 

அப்போது சில நபர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக  சாலையை மறித்து கோழி சண்டை விட்டுக் கொண்டிருந்தனர் இதனைக் கண்ட காவலர் திருநாவுக்கரசு கீழே இறங்கி சாலையை மறித்து கோழி சண்டை விடுவதை செல்போனில் வீடியோ எடுத்த போது, அங்கிருந்த நபர்கள் ஏன் செல்போனில் வீடியோ எடுக்கிறீர்கள் என கேட்டு தகராறு ஈடுபட்டு காவலரை தாக்கியுள்ளனர் காவலரை தாக்குவதை கண்ட பெண் உதவியாளர் மீனா தடுக்க வந்தபோது அவரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண் உதவியாளர் உட்பட இரண்டு காவல்துறையினரை தாக்கிய இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் போலீசாரை தாக்கிய நபர்கள் அயனாவரம் சோலையப்பன் கோயில் தெருவை சேர்ந்த மெட்ரோ வாட்டர் சூப்பர்வைசர் சஞ்சய் (20) மற்றும் டிராவல்ஸ் டிரைவர் குணசேகரன் 35 என்பதும் தெரியவந்தது. ஏற்கனவே குணசேகரன் மீது அயனாவரத்தில் சண்டை வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

காயமடைந்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மோதலினால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...... உதவிக்கு அழைத்த பிரதமர்....