ஆணவக்கொலையா? சொந்த அக்கா கணவரை கொன்ற தம்பி... கோவிலுக்குள் கிடந்த சடலம்

திருத்தணி உச்சி பிள்ளையார் கோயிலின் உள்ளே வைத்து இளைஞர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவக்கொலையா?  சொந்த அக்கா கணவரை கொன்ற தம்பி... கோவிலுக்குள் கிடந்த சடலம்

திருத்தணி உச்சி பிள்ளையார் கோயிலின் உள்ளே வைத்து இளைஞர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலை  மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஜாகிர் உசேன் என்பதும், இவரும் சரண்யா என்பவரும் சில வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்நிலையில் சரண்யாவின் தம்பி குமரேசனுக்கும் ஜாகிர் உசேனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரத்தில் குமரேசன் ஜாகிர் உசேனை கோவிலில் வைத்து கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், குமரேசன்  மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.