ஆன்லைனில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள்...14 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை...

இந்தியா முழுவதும் ஆன்லைனில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வீடியோக்களை பார்ப்பதும் பகிர்வதும் வியாபாரம் செய்வதுமான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ,14 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். தமிழகத்தில் 6 இடங்களில் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஆன்லைனில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள்...14 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை...

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  மற்றும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்ட நபர்கள் வீடியோக்களை பகிர்வதும், சேமித்து வைப்பதும், பார்ப்பதும் என தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பல வடிவங்களில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை, வாட்ஸப் குரூப் ஆரம்பித்து பகிர்தலில் ஈடுபடும் நபர்களை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த அடிப்படையில் இந்தியா முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் 83 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

ஆன்லைனில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் பிரிவை உருவாக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிபிஐயில் உள்ள ஆன்லைனில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு பிரிவு இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோக்கள் மட்டும் பதிவுகளை வெளியிடுவதாக கண்டறிந்துள்ளனர்.

இதில் சில குழுக்கள் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான குழுக்கள் வெளிநாட்டவர் தொடர்புடையவர்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்கள் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.