அரசு பஸ் கண்டக்டரிடம் செல்போன் திருட்டு... திருடிய பொருட்களுடன் மூன்று பேர் கைது...
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டடனர்.
வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்து அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வம். இவர் தண்டையார்பேட்டை பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பணிக்கு செல்லும்போது மூலக்கொத்தளம் அருகே உள்ள ஒரு ஓட்டல்களில் நின்று தனது செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு பல்சர் வாகனத்தில் வந்த 3 நபர்கள் செல்போனை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் கூச்சலிடவே அங்கு இருந்த செல்வத்தில் நண்பர்கள் உதவியுடன் அவர்களை இருசக்கர வாகனம் மூலம் துரத்தி சென்ற போது, திடீரென மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றனர்.
இதனையடுத்து ஓட்டுனர் செல்வம் மற்றும் அவர்களது நண்பர்கள் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யா, சிவா, திலிப், மற்றும் அவரிடமிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், லேப்டாப், செல்போன், மற்றும் பட்டா கத்திகள், பறிமுதல் செய்து மூவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.