கத்தியால் தாக்கி ஓய்வுப்பெற்ற தலைமைக் காவலரின் மகனிடம் செல்போன் பறிப்பு...

கத்தியால் தாக்கி ஓய்வுப்பெற்ற தலைமைக் காவலரின் மகனிடம் செல்போன் பறிப்பு செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கத்தியால் தாக்கி ஓய்வுப்பெற்ற தலைமைக் காவலரின் மகனிடம் செல்போன் பறிப்பு...

கத்தியால் தாக்கி ஓய்வுப்பெற்ற தலைமைக் காவலரின் மகனிடம் செல்போன் பறிப்பு செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்வ பாரத்(21). இவர் தரமணி சிபிடி கல்லூரியில் 3 ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார். விஷ்வ பாரத்தின் தந்தை ஓய்வுபெற்ற தலைமை காவலராக இருக்கும் நிலையில், சகோதரர் அஸ்வதாமன் காவலராக பணியாற்றி வருகிறார். விஷ்வ பாரத் கல்லூரியில் தனக்குள்ள பாடம் சம்மந்தப்பட்ட பணிகள் தொடர்பாக நேற்று சொந்த ஊரிலிருந்து தரமணியில் உள்ள கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது நுழைவு வாயிலில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவர் விஷ்வ பாரத்தை வழிமறித்து கத்தியால் தாக்கி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வந்த இருசக்கர வாகனம் பெட்ரோல் இல்லாமல் நின்றதால் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு செல்போனுடன் இருவரும் தப்பியோடி உள்ளனர்.

இது குறித்து விஷ்வ பாரத் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருசக்கர வாகனம் பெரும்பாக்கம் பகுதியில் திருடப்பட்டது என தெரியவந்த நிலையில் செல்போனை திருடிச் சென்ற இரு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.