12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்.. தனியார் பள்ளியை முற்றுகையிட்ட சமூக ஆர்வலர்கள்!!

12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்.. தனியார் பள்ளியை முற்றுகையிட்ட சமூக ஆர்வலர்கள்!!

புதுச்சேரியில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாவரவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

புதுச்சேரி மரப்பாலம் 100 அடி சாலையில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியில் பணியாற்றும் தாவரவியல் ஆசிரியர், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

புதுச்சேரியில் தனியார் பள்ளியை முற்றுகையிட்ட சமூக ஆர்வலர்கள்

இதுகுறித்த தகவலின் அடிப்படையில் சமுக அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் அந்த பள்ளியை முற்றுகையிட முயன்றனர். தகவல் அறிந்து வந்த முதலியார்பேட்டை போலிசார் பள்ளி வளாகத்திற்கு வந்து பள்ளி முதல்வர் மற்றும் சமூக அமைப்பினர் ஆகியோர் உடன் பேச்சு வார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட மாணவியை குழந்தை நலக்குழுவினரின் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவான தாவரவியல் ஆசிரியரை கைது செய்தது காவல்துறை

மேலும், பாலியல் தொல்லை புகாருக்கு ஆளாகி தலைமறைவாக இருந்த ஆசிரியரை கண்டமங்கலம் பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர்.  பாதிக்கப்பட்ட மாணவி அளிக்கும் வாக்குமூலத்தை அடுத்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.