காளி சிலையின் காலடியில் துண்டிக்கப்பட்ட மனித தலை!! நரபலியா..? அதிரடி விசாரணையில் இறங்கிய போலீசார்

தெலுங்கானா மாநிலத்தில் காளி சிலையின் காலடியில் மனித தலை கண்டெடுக்கப்பட்டதால் நரபலியா இருக்குமோ? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காளி சிலையின் காலடியில் துண்டிக்கப்பட்ட மனித தலை!! நரபலியா..? அதிரடி விசாரணையில் இறங்கிய போலீசார்

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் அருகே  பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று அமைந்துள்ளது.  அந்த கோவிலில் உள்ள காளி சிலையின் காலடியில் நேற்று ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட தலை  ஒன்று வைக்கப்பட்டிருந்தது.  இதை பார்த்த  கோவில் பூசாரி  போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  காளி தேவி சிலையின் காலடியில் மனித தலை வைக்கப்பட்ட விதம் நரபலியாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்தவரை அடையாளம் காண 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உடலின் எஞ்சிய பாகம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து  டி. எஸ்.பி தகவல் தெரிவித்தபோது, கொலை செய்யப்பட்ட அந்த நபருக்கு  30 வயது இருக்கும் எனவும், அந்த நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு,  அவரது தலை சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும்,  சிசிடிவி காட்சிகள் மூலம் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்து உடலை தேடி வருவதாகவும் கூறியுள்ளார். "இதுவரை, தலை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர் என்று டி எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார்.  

மேலும், கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், இந்த கொடூர குற்றத்தை செய்தவர்களை பிடிக்கவும் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  போலீசாரும் அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இதனால், சிலையின் காலடியில் வைக்கப்பட்டிருந்த  துண்டிக்கப்பட்ட தலை குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.