திறந்திருந்த வீட்டிற்குள் புகுந்து செல்போன் திருடிய டிப்டாப் கொள்ளையன்

திருப்பூரில் பட்டப்பகலில் திறந்திருந்த வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிச் சென்ற நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

திறந்திருந்த வீட்டிற்குள் புகுந்து செல்போன் திருடிய டிப்டாப் கொள்ளையன்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையிலுள்ள மாரியம்மன் கோவில் வீதியில் பட்டப்பகலில் டிப்டாப் உடையணிந்த நபர் ஒருவர் ஒவ்வொரு வீடாகச் சென்று நோட்டமிட்டு உள்ளார். பூட்டிய  கம்பெனிகளுக்கு சென்ற அந்த நபர்,  அங்கு எவற்றையும் எடுக்க முடியாமல் அருகில் இருந்த வீடுகளுக்கும் சென்று நோட்டமிட்டு உள்ளார் அப்போது இருந்த வீடு திறந்திருப்பதை கண்ட டிப்டாப் நபர், வீட்டின் உள்ளே சென்று மேசையில் வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

பின்னர் வீட்டின் உரிமையாளர் கணேசன் மேசையில் வைத்த செல்போனை எடுக்க சென்றபோது அங்கு செல்போன் இல்லாததை கண்டு பதற்றமடைந்த அவர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

அதில் டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர்  ஒவ்வொரு வீடாகச் சென்று நோட்டமிட்டு செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது