தாராபுரம் அருகே ரவுடிகளுக்குள் தகராறு... 5 பேரை கைது செய்தது காவல்துறை... 

ரவுடியை வெட்டி கொன்ற மற்றொரு ரவுடி கும்பல்; 5 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைப்பு

தாராபுரம் அருகே ரவுடிகளுக்குள் தகராறு... 5 பேரை கைது செய்தது காவல்துறை... 

தாராபுரம் அருகே ரவுடி விக்னேஷ் என்பவரை வெட்டி கொலை செய்த மற்றொரு ரவுடி கும்பலை போலீசார் கைது செய்தனர். மதுரையில் வசித்து வரும் விக்னேஷ் என்பவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளது.

2018 ஆம் ஆண்டு சுகன்ராஜ் தலைமையிலான  ரவுடி கும்பல் விக்னேஷின் அண்ணனை வெட்டி படுகொலை செய்தனர். இதற்கு பழிவாங்க விக்னேஷ் எதிர் கோஷ்டியில் இருவரை கொலை செய்துள்ளார். மேலும் இந்த மோதலில் சுகன்ராஜ் தனது காலை இழந்துள்ளார். 

இந்நிலையில் சுகன்ராஜின் கும்பல் தாராபுரம் அருகே ஆத்திகளம் பகுதியில் வைத்து விக்னேஷை சரமாறியாக வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கொலைக்கு தொடர்புடைய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.