விளை நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு...தம்பியை அண்ணனே வெட்டிக் கொன்ற கொடூரம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே விளை நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளை நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு...தம்பியை அண்ணனே வெட்டிக் கொன்ற கொடூரம்

தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த மயிலப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருணாசலத்திற்கும் அவரது தம்பி கணேசனுக்கும் கடந்த சில தினங்களாக விளை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று மீண்டும் அண்ணன் தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அருணாசலம் மறைத்து வைத்திருந்த மண்வெட்டியால், கணேசனின்  தலையை வெட்டி கொன்று விட்டு கடையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.