ஓவர்டேக் செய்ய வழிவிடாததால் தகராறு... லாரி கண்ணாடியை உடைத்த டிரைவர்கள் கைது...
ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி முன்பக்க கண்ணாடியை கற்களால் உடைத்த ஆம்னி பேருந்து டிரைவர்கள் இரண்டு பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி பகுதியில் லாரியை முந்தி செல்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் லாரி டிரைவரை திட்டி, கண்ணாடியை சேதப்படுத்திய தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லாரி டிரைவர் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். லாரி டிரைவரான இவர் கண்டெய்டனர் லாரி மூலம் சரக்கு ஏற்றுவதற்காக ஒசூரில் உள்ள இருசக்கர வாகனம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு வந்துள்ளார். சனிக்கிழமை மதியம் சூளகிரி அருகே அழகுபாவி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது ஆம்னி பேருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது வாகனம் முந்திச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் சுவராஜ் என்ற நிறுவனத்தின் ஆம்னி பேருந்து டிரைவர், லாரி அருகே நிறுத்தி லாரி டிரைவர் சண்முகத்தை தகாத வார்த்தையால், திட்டி கல்லால் தாக்கி கண்ணாடிகளை உடைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து பேருந்தை பெங்களூர் நோக்கி எடுத்துசென்று விட்டார். இது குறித்து லாரி டிரைவர் சண்முகம் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் வேகமாக வந்த பேருந்திற்கு இடையூறாக லாரி வந்ததாகவும், மோதாமல் இருக்க சாமர்த்தியமாக பேருந்தை சாலையோரம் நிறுத்தி, விபத்து ஏற்படும் வகையில் லாரி ஓட்டியதால் கோபத்தில் தாக்கியதாக கூறி உள்ளனர். மாநிலம் பெங்களூரை சேர்ந்த தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் நடத்துனர் சிக்கே கவுட மற்றும் பிரசாந்த் குமார் ஆகிய இருவரை சூளகிரி போலீசார் கைது செய்து அவர்கள் மீது கொலை மிரட்டல், வழிமரித்தல், ஆபாசமாக திட்டுதல் போது சொத்து சேதப்படுத்தி ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஓசூர் நடுவர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்பு ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.