கணவருடன் சென்ற முன்னாள் காதலியை வெட்டி கொலை செய்த முன்னாள் காதலன்...
முன்னாள் காதலி மீண்டும் கணவனோடு வாழ போனதால் கோவமான காதலன் அந்த காதலியை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது
ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் ரிஸ்வானா, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கடப்பா மாவட்டத்தில் உள்ள சிம்ஹாத்ரிபுரத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.அந்த பெண்ணுக்கு இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் .இந்நிலையில் அவரின் கணவரின் வேலை புலிவெந்துலாவுக்கு மாற்றப்பட்டதால் ,அவர்களின் குடும்பம் கடந்த ஆண்டு முதல் அங்கு வசித்து வந்தது.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள என்.கே.கல்வாவில் வசித்த னது முன்னாள் காதலனுடன் தொடர்பு ஏற்பட்டது .இதனால் அந்த ரிஸ்வானா மூன்று மாதங்களுக்கு முன்பு அவருடன் ஓடிவிட்டார்.
பின்னர் அந்த பெண் தன் காதலனோடு பெங்களூருவில் வசித்து வந்தார் .
இதை கேள்விப்பட்ட அந்த பெண்ணின் உறவினர்கள் அவரிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்தி அந்த காதலனிடமிருந்து பிரித்து கணவனோடு சேர்த்து வைத்தார்கள் .பின்னர் தன்னை விட்டு காதலி மீண்டும் கணவரோடு வாழ போனதால் அந்த காதலன் ஹர்ஷ்வர்தன் அந்த காதலியை சில நாட்களுக்கு முன்பு அவரை வீட்டில் வெட்டி கொலை செய்தார் .பிறகு இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இப்போது அவரை கொன்றதாக அவரின் முன்னாள் காதலன் ஹர்ஷவர்தன்கைது செய்யப்பட்டார்.