ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிலிட்டு கொலை... பீகாரில் நக்சலைட்டுகள் வெறிச்செயல்...

பீகாரில் பழிக்குப் பழியாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை, நக்சலைட்டுகள் தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிலிட்டு கொலை... பீகாரில் நக்சலைட்டுகள் வெறிச்செயல்...

கயா மாவட்டத்தில் உள்ள மனோபார் கிராமத்தில், கடந்த ஆண்டு போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது போலி என்கவுண்ட்டர் என குற்றம் சாட்டிய நக்சலைட்டுகள், தங்களின் சகாக்கள் 4 பேர் தங்கியிருந்த வீட்டினர்தான் அவர்களுக்கு விஷம் வைத்து கொன்றதாகவும், அதன்பின் போலி என்கவுண்ட்டர் நாடகம் அரங்கேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட குடும்பத் தலைவரான சர்ஜு சிங் போக்டா, அவரது மனைவி, 2 மகன்களை, அவர்களது வீட்டுக்கு முன் தூக்கிலிட்டு, நக்சலைட்டுகள் கொன்றுள்ளனர். பின்னர் வீட்டையும் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.