பறிமுதல் செய்யப்பட்ட 96 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள்...!!

பறிமுதல் செய்யப்பட்ட 96 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள்...!!

மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஆயிரத்து 565 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

வெளிநாட்டிலிருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில்,துபாயில் இருந்து மதுரை வந்த முஸ்தபா மரைக்காயர் என்ற பயணியிடம்  96 லட்சத்து 18 ஆயிரத்து 490 ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்து,  சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் துபாயில் இருந்து மதுரை வந்த பயணி ஒருவரை சோதனை மேற்கொண்டதில் பேஸ்ட் வடிவத்தில் தங்கத்தை மதுரைக்கு கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை கடத்தி வந்த அந்த நபரிடம் இதில் வேறு நபருக்கு தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:   காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காவல் உதவியாளர் தம்பதியினர்...!!!