பெரம்பூர் மேம்பாலத்தில் அரசு பேருந்து மோதி இளைஞர் பலி!

சென்னை பெரம்பூர் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூர் மேம்பாலத்தில் அரசு பேருந்து மோதி இளைஞர் பலி!

சென்னை பெரம்பூர் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் நேத்தல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்மணி.  தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரின் வாகனம் மீது பெரம்பூர் மார்கமாக வந்த மாநகரப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் லோகேஷ் மீது பேருந்து ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லோகேஷின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷ் உடன் வந்த மணிகண்டன் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய வியாசர்பாடியைச் சேர்ந்த மாநகரப் பேருந்து ஓட்டுனர்  சண்முகவேல் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.