கடற்கரைக்கு வந்தவர்களிடம் கைவரிசை... கன்னியாகுமரியில் பரபரப்பு...

கன்னியாகுமரி கடலில் புனித நீராடிய பக்தர்களிடம் கைவரிசை காட்டிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்கரைக்கு வந்தவர்களிடம் கைவரிசை... கன்னியாகுமரியில் பரபரப்பு...

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் தற்போது சீசன் காலம் என்பதால் சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருவது அதிகரித்துள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிகாலையில் சூரிய உதயத்தைப் பார்ப்பது ரசித்துவிட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் ஏராளமானோர் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர்.

மேலும் தங்களது உடமைகளை கடற்கரையில் வைத்துவிட்டு கடலில் புனித நீராடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று கன்னியாகுமரிக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் கடலில் நீராட தங்களது உடமைகளை வைத்துவிட்டு குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் கரையில் ஐயப்ப பக்தர்கள் வைத்திருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதைக்கண்ட அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு போலீசாரிடம் தெரிவித்தனர்.

உடனே போலீசார் விரைந்து அவரை பிடித்து அந்த நபர் திருடிய பொருட்களை பிடுங்கி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி வயது 43 என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கன்னியாகுமரி வந்த ஐயப்ப பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.