சாப்பிடாமல் மனைவி விரதம்.. பல பெண்களுடன் ரூம் போட்டு கணவர் உல்லாசம் ... பிரபல பாடகர் மீது பகீர் புகார் 

பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக பாலிவுட் ராப் பாடகர் யோ யோ ஹானி சிங் மீது அவரது மனைவி ஷாலினி தல்வார் குற்றம் சாட்டியுள்ளார்.

சாப்பிடாமல் மனைவி விரதம்.. பல பெண்களுடன் ரூம் போட்டு கணவர் உல்லாசம் ... பிரபல பாடகர் மீது பகீர் புகார் 

லுங்கி டான்ஸ் என்ற பிரபல பாடலை பாடி ஹானி சிங் பிரபலமானர். இவரது மனைவி ஷாலினி தல்வார் கணவர் ஹானி சிங் மீது புகார் அளித்துள்ளார். டெல்லி நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விவரித்து 120 பக்க மனுவை , அவர் மனைவி தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த மனுவில் தனது கணவர் ஹானி சிங் தம்மை உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக துன்புறுத்தியதாகவும், 2011-ல் திருமணத்திற்குப் பிறகு மிகவும் கொடுமைப்படுத்தி, கடுமையாக நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தன் விருப்பத்திற்கு மாறாக தான், உன்னை திருமணம் செய்து கொண்டேன், என்று மனைவியிடம் கூறியுள்ளார் பாடகர் யோ யோ ஹானி சிங் .

மொரீஷியசுக்கு பிறகு ஹானி சிங் தனது சுற்றுப்பயணங்களில் தன்னை அழைத்துச் செல்ல மறுத்து, 'பல பெண்களுடன் அடிக்கடி தகாத கொள்ளத் தொடங்கினார்' என்றும் தான் திருமணமானவர் என்பதை மறைத்தும் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு சமயம், திருமணத்தின் படங்கள் ஆன்லைனில் கசிந்த போது, ​​தன்னை அவர் 'இரக்கமின்றி அடித்ததாகவும்', தான்தான் திருமண புகைப்படத்தை ஆன்லைனில் அப்லோட் செய்தேன் என்று சந்தேகப்பட்டு துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.  

மேலும், பிரவுன் ரங் மியூசிக் வீடியோவில் அவருடன் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஷாலினி குற்றம் சாட்டினார். அந்த மனுவில், 'கர்வா சவுத்' அன்று அவருக்காக சாப்பிடாமல் விரதம் இருந்தபோது, ​​அவர் அந்த பெண்ணுடன் துபாயில் உல்லாசமாக இருந்தாக குற்றம் சாட்டியுள்ளார் ஷாலினி.

மேலும் "துபாயில் இருந்து அவர் திரும்பியவுடன், ஒரு பெண்ணுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்களை தான் காண நேரிட்டது என்றும் இது பற்றி அவரிடம் கேட்ட போது, உன்னோட வேலைய பாரு, என்று தன் மீது 'மது பாட்டில்களை' வீசினார் என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தான், வெவ்வேறு பெண்களுடன் தனது கணவர் இருக்கும் ஆபாச படங்களைக் கண்டுபிடித்ததாகக் ஷாலினி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, தலைமை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் தனியா சிங், ஹனி சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

மேலும், டெல்லியில் தான் தனியே வசதியுள்ள வீட்டில் வாழவும், தனது விதவை தாயை சார்ந்து இருக்க முடியாத காரணத்தினாலும், தனக்கு ஒவ்வொரு மாதமும் 5 லட்சம் வாடகை வழங்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார் யோ யோ ஹானி சிங் மனைவி ஷாலினி தல்வார். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.