மனைவியின் உறவினர்களை கத்தியால் குத்திய கணவர் கைது!  

ஒசூர் அருகே மனைவியின் உறவினர்களை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியின் உறவினர்களை கத்தியால் குத்திய கணவர் கைது!   

ஒசூர் அருகே மனைவியின் உறவினர்களை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், இருதாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனிசந்திரன், ரேகா தம்பதி. கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட முனிசந்திரன், மனைவி ரேகாவை அவரது வீட்டாரிடமிருந்து பணம் வாங்கி தருமாறு கூறி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவர் கத்தியை எடுத்து கொண்டு மனைவியை குத்துவதற்காக துரத்தியுள்ளார். இதனை தடுக்க முயன்ற ரேகாவின் உறவினர்கள் இருவரை முனிசந்திரன் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் முனிசந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.