இளைஞருடன் தகாத உறவு... ஊர் சுற்றிய மனைவி..! முத்தம் கொடுப்பதாக அழைத்து கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்!!

முத்தம் கொடுப்பதாக அழைத்து கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்.

இளைஞருடன் தகாத உறவு... ஊர் சுற்றிய மனைவி..! முத்தம் கொடுப்பதாக அழைத்து கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்!!
ராமேஸ்வரம் அடுத்த மல்லிகா நகர்ப்பகுதியில் 25 வயதுடைய பவித்ரா என்ற இளம்பெண் கணவரால் கழுத்து அறுக்கப்பட்டு இன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ராமேஸ்வரத்தில் மல்லிகை நகர் பகுதியில் வசித்து வருபவர் பவித்ரா, இவர் கணவர் பெயர் தில்லை குமார்  இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதுடைய பெண் பிள்ளை ஒன்று உள்ளது ராமேஸ்வரம் பகுதியில்  வசித்து வருகின்றனர்.
 
இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி பவித்ராவை  காணவில்லை என கணவன் தில்லை ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
 
சில நாட்களுக்கு பின்பு அவரது மனைவி அதே பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் தீபன் என்னும் இளைஞருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பவித்ரா, அந்த இளைஞனுடன் வெளியில் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வாக்குவாதம் நிலவி வந்த சூழலில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருவீட்டார் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கணவன் தில்லையுடன்  பவித்ராவை ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.
 
இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை சச்சரவு வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
 
இன்று காலை 11.10 மணி அளவில் பவித்ரா தனது அம்மா வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது, குழந்தைக்கு முத்தம் கொடுப்பது போல மனைவி பவித்ராவை இளநீரை வெட்டுவதற்கு வைத்திருந்த அரிவாளை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தில்லை தப்பி ஓடியுள்ளார்.
 
அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் நகர் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மாயமான தில்லையை தீவிரமாக தேடி வருகின்றனர்.