சொத்துக்காக வங்கியில் வைத்து மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவன்!!

தேனியில் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தராத மனைவியை கணவன் சரமாரியாக வெட்டிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக வங்கியில் வைத்து மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவன்!!

தேவாரம் அருகே மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி- பிரேமலதா தம்பதியினர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதனால் மனைவி பிரேமலதா பெயரில் வாங்கிய சொத்துகளை தனது பெயருக்கு மாற்றித்தரும்படி, வெள்ளைசாமி கேட்டுள்ளார்.

இதற்கு பிரேமலதா மறுத்து வந்ததால் ஆத்திரமடைந்த அவர், மனைவி வங்கிக்கு செல்வதை அறிந்து அவரை பின் தொடர்ந்து சென்று வங்கியிலே வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

மேலும், சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தராத காரணத்தால் மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவனின் வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.