சுரேஷை மறக்க முடியாமல் தவித்த வித்யா... தடை போட்ட கணவன் சுபாஷ்!! தனி வீடு எடுத்து உல்லாச வாழ்க்கை... பால்டாயில் குடித்து உயிரைவிட்ட சோகம்

நாகர்கோவில் அருகே கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் போலீசுக்கு பயந்து  காதல் ஜோடிகள் விஷம் குடித்த நிலையில், புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த ஒரு வாரத்திற்கு பின்னர்  இளம் பெண்ணும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

சுரேஷை மறக்க முடியாமல் தவித்த வித்யா... தடை போட்ட கணவன் சுபாஷ்!! தனி வீடு எடுத்து உல்லாச வாழ்க்கை... பால்டாயில் குடித்து உயிரைவிட்ட சோகம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சங்கரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சுரேஷ்குமார் (25) இவர் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை வண்டி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவரது மனைவி வித்யா (31) தேரூர் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
 
பணி நிமித்தமாக சுரேஷ்குமாரும் வித்யாவும் அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இருவருக்குமிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனையடுத்து வித்தியா தான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை மறந்து சுரேஷ்குமார் உடன் பல இடங்களுக்கு  சென்று உல்லாசமாக பொழுதை கழித்து வந்தார்.இந்த தகவல் சுரேஷ்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து பெற்றோர் அவரை கண்டித்தனர்.
 
மேலும் அவருக்கு திருமணம் செய்து வைத்தால் கள்ள காதலை விட்டு விடுவார் என நினைத்து நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த பெண்ணை சுரேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன் பின்னர் கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக இருந்து வந்த நிலையில் கள்ளக்காதல் ஆசையால் வித்தியாவால் சுரேஷ்குமாரை மறக்க முடியாததால் மீண்டும் சுரேஷ்குமாரை சந்திக்க துவங்கினார். இதனை வித்தியாவின் கணவர் சுபாஷ் கண்டித்தும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதன் பின்னர் சுரேஷ்குமார் வித்யா இருவரும் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் என்னும் பகுதியில் கணவன் மனைவி என்று கூறி வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் மனைவியை காணாததால் சுபாஷ் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை செய்து இருவரும் செட்டிகுளத்தில் இருக்கும் தகவல் அறிந்து அவர்களை பிடிக்க சென்றனர். இந்த தகவல் இருவருக்கும் கிடைத்ததால் இருவரும் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்தனர். இதனை பார்த்த போலீசார் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார்.  விதியாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். 
கள்ளக்காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.